 |
உதவிச் செய்தி இணைப்பாளராக ரெல்ஷான் நெற்வர்க்
நிறுவனத்துடன் (TNL)
தொடர்பு கொண்டதோடு பின்னர் செய்தி இணைப்பாளர்
மற்றும் பிரதிச் செய்தி தொகுப்பாளராக
நியமிக்கப்பட்டார். (1995 ஆகஸ்ற் முதல் 1997 ஏப்றில்
வரை) |
 |
ரி. என். எல் தொலைக்காட்சியின் ‘ஜனஹன்ட’ மற்றும்
நடப்பு விவகாரங்கள் நிகழ்ச்சியை நெறிப்படுத்துதலும்
தொகுத்து வழங்குதலும் (1996 செப்ரெம்பர் முதல் 1998
ஏப்றில் வரை) |
 |
சிரச ரூபவாஹினியின் நிறைவேற்று நிகழ்ச்சித்
தயாரிப்பாளராகவும் நிகழ்ச் சித்திட்ட
நெறியாள்கையாளராகவும் செயலாற்றியமை
(1998
யூன் –
2004
ஏப்றில்) |
 |
எம். ரீ. வீ. செனல் தனியார் கம்பெனிக்குச் சொந்தமான
சிரச தொலைக் காட்சியில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த
அரசியல் மற்றும் நடப்பு விவாதங்கள் நிகழ்ச்சியான
‘‘சமீப தசுன’’ நிகழ்ச்சியின் நெறியாள்கை, தொகுத்து
வழங்குதல் மற்றும் தயாரிப்பு (1998
யூன் –
2004
ஏப்றில் ) |
 |
சிரச தொலைக்காட்சி ஊடாக வாரந்தோறும் ஒளிபரப்பாகிய
அரசியல் மற்றும் நடப்பு விவகாரங்கள் பற்றிய
நிகழ்ச்சியான ‘விசம்முதிய’ ‘ஜனதா பிரஸ்ன’ மற்றும்
‘செபே விசதும்’ நிகழ்ச்சிகளின் நெறியாள்கை தொகுத்து
வழங்குதல் மற்றும் தயாரிப்பு (1999 ஒக்டோபர் - 2004
வரை) |
 |
உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்
(1996 இல் இருந்து 2004 வரை) |
 |
பிரட்றிக் நியுமான்
(FNSt)
மன்றத்தின் அனுசரணையில் இயங்கிவரும் சனநாயகம் மற்றும்
தலைமைத்துவத்திற்கான நிறுவனத்தின்
(IDL)
ஊடக இணைப்பாளர் (2005 - 2010) |
|
பல்கலைக்கழக வாழ்க்கை
::.. |
 |
களனிப் பல்கலைக்கழக மருத்துவபீட உள்ளுறைக்கு முந்திய
மருத்துவப் பயிற்சியாளர் ஆவார். (1993- 2003) |
 |
இலத்திரனியல் ஊடக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும்
பல்கலைக்கழக மாணவரெனும் வகையில் ஊடகத்துறைக்கு ஆற்றிய
பங்களிப்பினைப் பாராட்டி பேராதனைப் பல்கலைக்கழக
இலக்கிய சங்கமும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்
ஒன்றியமும் ஏற்பாட செய்த ‘மாகே தேசிய அவதி கரனுமென’
கலைவிழாவில் ‘சரசவி பிரக்ஞாகுரயெக்’ விருதினைப்
பெற்றார்.
(1998) |
|
|
பாடசாலை வாழ்க்கை
::.. |
 |
மாத்தறை றாஹுல வித்தியாலயத்தின் பழைய மாணவர் (1980 –
1993) |
 |
றாஹுல வித்தியாலய சிரேஷ்ட விவாதக்குழு தலைவர் (1991 –
1992) |
 |
றாஹுல வித்தியாலய கனிஷ்ட மாணவர் தலைவர் (1990 – 1991) |
 |
மாத்தறை மாவட்ட அனைத்து வித்தியாலய மாணவர் தலைவர்
சங்கத்தின் உதவிச் செயலாளர் (1990-1991) |
 |
றாஹுல வித்தியாலய சிரேஷ்ட மாணவர் தலைவன் (1991 –
1993) |
 |
சிங்கள இலக்கிய மன்றத்தினதும் விஞ்ஞான சங்கத்தினதும்
செயலாளர் (1990 – 1993) |
 |
அஷோக இல்லத்தின் ஹொக்கி அணி அங்கத்தவர் (1985
-1987) |
 |
அஷோக இல்லத்தின் கூடைப்பந்து அணி அங்கத்தவர்
(1987-1988) |
 |
றாஹுல வித்தியாலயத்தையும் மாத்தறை மஹா மன்தின்த
பிரிவென் விஹார பெதிகம ஸ்ரீ ரத்தனபால அறநெறிப்
பாடசாலையையும் பிரதிநிதித்துவம் செய்து தேசிய
மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் பேச்சுப்
போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றதோடு தங்க,
வெள்ளிப் பதக்கங்கள் பலவற்றையும் விருதுகள்
பலவற்றையும் வென்றெடுத்துள்ளார். (1989-1993) |
|
|
சமயம்சார் சேவைகள்
::.. |
 |
மாத்தறை புரட்டாதி மகா பெரஹெராவின் பஸ்நாயக்க நிலமேயாக
2007 ஆம் ஆண்டில் இருந்து இற்றைவரை செயலாற்றி
வருகிறார். |
 |
17வது வயதில் மாத்தறை, மஹாமன்தின்த பிரிவென்
கல்லூரியின் பெதிகம ஸ்ரீ ரத்தினபால தஹம் பாடசாலையின்
அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டு இலங்கையின் வயதில்
மிகக்குறைந்த தஹம் பாடசாலை பிரதான ஆசிரியராக
(1991 – 1998)
சாதனை படைத்தார். |
 |
தேசிய விழுமியங்கள் கல்வி மன்றத்தின் தேசிய அமைப்பாளர்
(2000 முதல் இற்றைவரை) |
 |
மாத்தறை பிரதேச சாசனப் பாதுகாவலர் சபையின்
(1996 – 2000)
தஹம் பாடசாலை உபகுழுவின் செயலாளர். |
 |
மாத்தறை மாவட்ட தஹம் பாடசாலை ஆசிரியர் அபிவிருத்தி
நிறுவகத்தின் பணிப்பாளர்
(1993 – 2003) |
 |
தென்மாகாண தஹம் பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சி
நிகழ்ச்சிகளை நடாத்துதல் (1993
முதல் இற்றைவரை) |
 |
மாத்தறை மாவட்ட தஹம் பாடசாலை மாணவர் தலைவர்களுக்கான
பயிற்சி நிகழ்ச்சிகளை நடாத்துதல் (1995 முதல்
இற்றைவரை) |
 |
போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக தஹம் பாடசாலை
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான கருத்திட்டங்களில்
ஈடுபடல்
(1994
முதல் இற்றைவரை) |
|
|
ஒரு சாரணர் எனும் வகையில்
::.. |
 |
இலங்கையின் சாரணரொருவர் பெறக்கூடிய அதிஉயர் விருதான
சனாதிபதி சாரணர் விருத்தியை 17வது வயதில் பெற்றுக்
கொண்டமை (1991) |
 |
“3 வது மாத்தறை றாஹுல’ சாரணர் அணியின் பிரிவுச்
செயலாளர் (1990
– 1993) |
 |
இலங்கை தேசிய சாரணர் தலைமையகத்தின் உதவித் தலைமையக
சாரணர் ஆணையாளராக செயலாற்றினார்.
(2001 – 2004) |
 |
சாரணர் இயக்கத்திற்கு அவர் ஆற்றிய சேவையைப் பராட்டு
முகமாக இலங்கையின் தலைமைச் சாரணரான சனாதிபதியவர்களால்
The Thanks Badge
விருது 2009 இல் வழங்கப்பட்டது. |
|
|
செஞ்சிலுவை அமைப்பின் சமூக சேவைகள்
::.. |
 |
மாத்தறை மாவட்ட கனிஷ்ட செஞ்சிலுவை கருத்திட்டத்தை
தாபிக்கும் பொருட்டு முன்னோடியாகத் திகழ்ந்ததோடு
16வது வயதில் அதன் முதலாவது மாவட்டச் செயலாளர் ஆனார்
(1990-1991) |
 |
இலங்கை செஞ்சிலுவைக் கழகங்கள் கட்டியெழுப்பப்பட்ட
வேளையில் மாத்தறை மாவட்ட இளைஞர் செஞ்சிலுவைக்
கழகத்தின் முதலாவது மாவட்டச் செயலாளர்.
(1991-1992) |
 |
றாஹுல வித்தியாலயத்திற்கு கனிஷ்ட செஞ்சிலுவைக் கழகத்தை
அறிமுகஞ் செய்ய முனைந்து செயலாற்றியதோடு வித்தியாலய
கனிஷ்ட செஞ்சிலுவைக் கழகத்தின் முதலாவது பாடசாலை
செயலாளர் ஆனார்.
(1990 – 1991) |
|
முத்துஹர சிறுவர் கழகத்தின்
::.. |
 |
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் முத்துஹர
சிறுவர் கழக கருத்திட்டத்துடன் இணைந்து முத்துஹர
சிறுவர்கழக மாத்தறை நகர்க கிளையை நிறுவுவதில் முனைந்து
செயலாற்றியதோடு 13வது வயதில் அதன் ஸ்தாபக
தவிசாளரானார்.
(1981 – 1990) |
 |
மாத்தறை முத்துஹர சிறுவர் கழகத்தின் ஆலோசனை சபையின்
தவிசாளர் (1990 இல் இருந்து இற்றைவரை) |
|
|
ஈடேற்றிய விசேட கருத்திட்டங்கள்
::.. |
 |
மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த பொருளாதார வசதியீனங்களை
எதிர் நோக்கும் பாடசாலை மாணவர்களுக்கு உதவும்
பொருட்டு “சிஷ்ய பிரபோதய” கருத்திட்டத்தை
ஆரம்பித்தார். |
 |
தான் கல்வி பயின்ற பாடசாலையான மாத்தறை றாஹுல
வித்தியாலயத்தில் இருந்து மருத்துவ பீடத்திற்கு
பிரவேசிக்க தகைமை பெறுகின்ற பொருளாதார சிரமங்களை
எதிர்நோக்கியுள்ள மாணவர்க ளுக்குப் புலமைப்பரிசில்களை
வழங்குதல். |
|
|
பயின்றவிசேட பயிற்சிப் பாடநெறிகள்
::.. |
 |
தஹம் பாடசாலைக் கல்வி தொடர்பான சிறுவர் உளவியல்,
கல்வித் தத்துவம் மற்றும் தலைமைத்துவப் பயிற்சிப்
பாடநெறியைப் பயின்றார்.
(1990 – 1993) |
 |
கெப்பிட்டல் றேடியோ பயிற்சி நிறுவகத்திலும் (1989)
குமாரசிங்க றேடியோ மற்றும் இலெக்ரோனிக் பயிற்சி
நிறுவனத்திலும் (1990) றேடியோ இலெக்ரோனிக்
விஞ்ஞானம் பற்றிய பாடநெறியைப் பயின்றார். |
 |
உண்மையான பெளத்தராக செயலாற்றுகின்ற அதே வேளையில்
கிறிஸ்தவ சமயம் பற்றிய பாடநெறியொன்றை வெற்றிகரமாகப்
பயின்று சான்றிதழ் பெற்றுள்ளார் (1987-1988) |
|
|
குடும்பப் பின்னணி
::.. |
 |
1974 மார்ச் 17 ஆம் திகதி மாத்தறை பெரியாஸ்பத்திரியில்
பிறந்தார். மாத்தறை மாவட்டத்தின் கம்புறுபிட்டிய
பிரதேச செயலகப் பிரிவின் திஹகொட மற்றும் மாலிம்பொட
ஆகிய விவசாயக் கிராமங்கள் மூதாமையர்களின் ஆதிக்
கிராமங்களாக அமைந்தன. |
 |
தகப்பனாரான திரு. எம். எஸ். டி. பத்திரண சிங்கள
மொழிப் பட்டதாரியாக விளங்கி யதோடு ஆசிரியராகவும்
தேசிய கல்வி நிறுவனம் மற்றும் ஆசிரியர் கலாசாலைகளில்
முதுநிலை விரிவுரையாளராகவும் பின்னர் கல்வித்
திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும்
பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். |
 |
தாயாரான திருமதி. ஜே. கே. குணவர்த்தன, கீர்த்திமிக்க
கொத்தலாவல / ஆட்டிகல பரம்பரையைப் பிரதிநிதித்துவம்
செய்வதோடு ஆசிரியையாகவும் ஆசிரிய ஆலோசக ராகவும்
பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். |
 |
ஒரே சகோதரி றுஹுணு பல்கலைக்கழகத்தில் உதவி நூல்நிலைய
அதிபதியாக சேவையாற்றி வருவதோடு அவரது கணவர் உள்நாட்டு
இறைவரித் திணைக்களத்தின் வரி உத்தியோகத்தவராவார். |
 |
பாரியாரான திருமதி மிஹிரி வர்ணகுலசூரிய இத்தாலிக்கான
இலங்கைத் தூதுவர் சனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த
வர்ணகுலசூரியவின் புதல்வியாவார். |
 |
இலங்கையில் நிகழ்கால அரசியலில் ஈடுபட அத்தியாவசியமான
காரணியாக அமைந்துள்ள அரசியல் அல்லது செல்வம் நிறைந்த
குடும்பப்பின்னணி எவ்விதத்திலும் இவருக்கு கிடையாது. |